காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!!

காகித நிறுவன ஆலையில் தீ வைப்பு..!! தொழிலாளர் கைது ..!!

கனடாவில் ஒன்ட்டாரியோவில் (Ontario) உள்ள ஒரு காகித நிறுவன ஆலையில், தீ வைத்த குற்றத்திற்காக அங்கு பணிபுரியும் தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஆனது, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) அன்று அதிகாலையில் கிம்பர்லி – கிளார்க் (Kimberly – Clark) என்ற காகிதப்பொருள் தயாரிப்பு நிறுவன ஆலையில் நடந்துள்ளது.

இந்த தீ விபத்தில் அந்த ஆலையின் கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்துள்ளது.

இந்த தீயை அணைப்பதற்காக 125 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து ஏற்படும் பொழுது, ஆலையில் 20 ஊழியர்கள் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சமீல் அப்துல்கரீம் (Chamel Abdulkarim) என்று 29 வயது நபரை காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த நபர் கிம்பர்லி – கிளார்க் தயாரிப்புகளை விநியோகம் செய்யும் NFI நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்துல்கரீம் பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளிப் பதிவிடப்பட்டிருந்தது. அந்த காணொளியில் ஒருவர் கழிப்பறையில் காகித உருளைகளுக்குத் தீ வைப்பது போன்று தெரிகிறது. அந்த தீ வைத்தவர் கரீம் தான் என்று நம்பப்படுகிறது.

அந்த காணொளியில் அவர், “நாங்கள் வாழத் தேவையான அளவுக்கு சம்பளம் வழங்கவில்லை என்றால், இதுபோன்ற செயல்களைச் செய்யாமல் இருப்பதற்காகவாவது சரியான சம்பளத்தை கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.

தீப் பரவுவதைக் கண்ட அவர் “இதோ உங்களது பொருட்கள் அழிந்து கொண்டிருக்கின்றன” எனவும் அந்த காணொளியில் பதிவிட்டிருந்தார்.

அந்த காணொளியை அந்த தொழிலாளரேப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்த எந்த ஒரு தகவலையும் தற்பொழுது ஒன்ட்டாரியோ காவல்துறை வழங்கவில்லை.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK