MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!!

MRT பெட்டிக்குள் மேக்கப் வேண்டாம்..!!சுரங்கப்பாதை அறிவிப்பால் இருதரப்பு வாக்குவாதம்..!!

சிங்கப்பூர் : TrulySG என்ற முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 12 அன்று MRT பெட்டிகளில், பொது இடங்களில் உங்களை அழகுப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்ற அறிவிப்பு அறிவிப்புப் பலகை பதிவேற்றப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பு பலகையின் அடிப்படையில், சுரங்க ரயிலில் ஒப்பனை செய்து கொள்ளவோ அல்லது நகங்களை வெட்டிக் கொள்ளவோ கூடாது என்பது பொருளாகும்.

இந்த அறிவிப்புப் பலகையால் இணையத்தில் இருதரப்பு வாக்குவாதங்கள் தோன்றியுள்ளது.

சிலர் ரயிலில் இருந்து இறங்கிய பிறகு கழிவறையில் ஒப்பனை செய்து கொள்ளலாம் என்று கூறி இந்த அறிவிப்பிற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

வேறு சிலர் சுரங்கப் பாதையில் மக்கள் ஒப்பனை செய்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளனர்.

சுரங்கப் பாதையில் மக்கள் தங்களது நகங்களை வெட்டுவது அல்லது தலைவாரி கொள்வதோடு மட்டுமல்லாமல், தலைமுடிகளையும், நகங்களையும் பெட்டிகளில் விட்டு செல்வது அருவருப்பானதாகவும் சுகாதாரமற்றதாகவும் உள்ளதாக மாறுபட்ட கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

ரயில்களில் பயணிகளின் நலன்களைக் கடைபிடிப்பதை MRT ஊக்குவிக்கும் வகையில் ஒரு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு பலகை உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் எஸ்.எம்.ஆர்.டி நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளி வெளியிட்டிருந்தது.

அந்த காணொளியில் வடக்கு – தெற்கு மற்றும் கிழக்கு – மேற்கு வழித்தடங்களில் உள்ள சில ரயில்கள் பயணிகளகளின் நலன் கருதி, அழகான, வட்ட வடிவ மற்றும் மனித உருவப்படங்கள் இடம்பெற்று இருந்தது.

மேலும் அதில் கைப்பிடிகளைப் பிடித்துக் கொள்வது, ரயில் பெட்டிக்குள் மேலும் நகர்ந்து செல்வது, தரையில் உட்காராமல் இருப்பது மற்றும் தனிப்பட்ட உடமைகளைக் கவனிக்காமல் விட்டு செல்லாமல் இருப்பது போன்ற நினைவூட்டல்கள் உருவப்படங்களும் காணப்பட்டன.

சுரங்கப்பாதையின் இந்த அறிவிப்பால் சில இணையவாசிகள் உதட்டு சாயம் பூசுவது மற்றும் ஒப்பனையை சரி செய்வது பாதிப்பில்லாதது எனவும் , இதைத் தடை செய்வது மிகவும் கடுமையானது எனவும் இணையதளத்தில் கூறி வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK