ப்ரீபெய்டு தொலைபேசி அட்டை மோசடி…!! 12 இளம் சிறுவர்கள் மீது சட்ட நடவடிக்கை…!!!

ப்ரீபெய்டு தொலைபேசி அட்டை மோசடி...!! 12 இளம் சிறுவர்கள் மீது சட்ட நடவடிக்கை...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ப்ரீபெய்டு தொலைபேசி அட்டைகளை சட்டவிரோதமாக பதிவு செய்ததாகக் கூறப்படும் 12 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்படும் இந்த 12 பேரில் 11 ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் 15 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களாவர்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவர்கள் ஒவ்வொரு தொலைபேசி அட்டைக்காக $10 முதல் $15 வரையில் இழப்பீடு பெற்றுள்ளனர். மேலும், அவர்கள் தங்கள் சொந்த பெயரில் பதிவு செய்த 17 முதல் 42 வரை ப்ரீபெய்டு தொலைபேசி அட்டைகளை குற்றவாளிகளிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் பெறும் அறிவுறுத்தல்களின் பேரில், பல்வேறு சில்லறை விற்பனை நிலையங்களுக்குச் சென்று பெருந்தொகையில் சிம்கார்டுகளைப் பதிவு செய்து வாங்கினர். பின்னர் அவற்றை குற்றவியல் கும்பல்களுக்கு ஒப்படைத்து, அவர்களின் பணிகளைச் செய்தனர்.

இந்த கும்பல்கள் அந்த சிம்கார்டுகள் மற்றும் eSIM-களை பயன்படுத்தி, மோசடி, சட்டவிரோத கடன் பெறுதல் மற்றும் விபச்சாரம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 12 பேரும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 தேதிகளில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு $10,000 வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan