சிங்கப்பூரில் புதிய 3D நடை மேம்பாலம்..!! எங்கே..??
சிங்கப்பூரில் நடை மேம்பாலம் முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தின் (3D) துணைகொண்டு கட்டப்படவிருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இந்த மேம்பாலம் 10 மீட்டர் நீளமும், 5 மீட்டர் அகலம் கொண்டு உருவாக்கப்பட உள்ளது.
இந்த நடை மேம்பாலம் ஜுரோங் கால்வாயில் அமைக்கப்படவுள்ளது. 10 மீட்டர் நீள பாலம் ஜுரோங்கிற்கும், தெங்காவுக்கும் இடையே செல்வதற்கான நேரத்தை குறைக்கும் வகையில் இருக்கும்.
முப்பரிமாண அச்சுத் தொழில்நுட்பத்தை (3D) வைத்து கட்டுமானத்துறையில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்று நில போக்குவரத்து ஆணையம் கூறுகிறது. அதன் முன்னோட்டத் திட்டம் தான் இந்த புதிய 3D நடை மேம்பாலம்.
இந்த 3D நடை மேம்பாலம் 2028 திறக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.