விமானத்தில் 9 பயணிகள், 1 விமானி என மொத்தம் 10 பேர் இருந்தனர். விபத்தின் போது ஒருவர் மட்டும் உயிர் பிழைத்து மீட்கப்பட்டார். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.
நாடே மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய சுதந்திர தினம் தற்போது துக்க நாளாக மாறிவிட்டது என்று பஹாமஸ் பிரதமர் பிலிப் டேவிஸ் மிகுந்த வேதனையுடன் இந்த விபத்து குறித்து தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான விமானம் ‘பிளமிங்கோ ஏர்’ என்ற உள்ளூர் நிறுவனத்திற்கு சொந்தமானது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நிறுவனத்தின் அனைத்து விமான சேவைகளையும் மற்றும் உரிமத்தையும் போக்குவரத்து அமைச்சகம் உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து அந்த நாட்டின் வான் விபத்து விசாரணை ஆணையம் (AAIA) மற்றும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.