தவறான பதிவை வெளியிட்ட பதிப்பாளர்..!! POFMA பிறப்பித்த உத்தரவு..!!
சிங்கப்பூரில் ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ என்ற இதழின் முதன்மை ஆசிரியரான டெர்ரி சூ, அவ்விதழின் வெளியீட்டாளருமான மியாவ் யி இன்போடெக் நிறுவனமும் தவறான தகவல்கள் குறித்த பதிவினை வெளியிட்டுள்ளது.
இது குறித்த மார்ச் 9 ஆம் தேதி இணைய குடிமக்கள் வலைத்தளங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் தவறான மற்றும் திசை திருப்பும் விதமாக தகவல்கள் அடங்கியுள்ளது என்று சட்ட அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் 38 ஆக்சிலி சாலையை வலுக்கட்டாயமாக தன்வசப்படுத்திய வழக்கிலிருந்து தலைமை வழக்கறிஞர் வோங் லு ஷெங் தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை இந்த ஆண்டு(2026) நாடாளுமன்ற நிதி ஒதுக்கீட்டு குழு விவாதம் நடைபெற்ற போது வோங் லு ஷெங்கின் தலைமை வழக்கறிஞர் மறு நியமனம் குறித்து தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் அவர்கள் தொடர் கேள்விகள் கேட்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை மேலும் அரசியல் அமைப்பின்படி தலைமை வழக்கறிஞர் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும். ஆனால் பிரதமர் வோங் லு ஷெங்கின் பதவி காலத்தை 75 வயது வரை நீட்டித்து உள்ளார்.
இதனால் சட்ட அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான டாங் ஜென்ஹூய், இணைய வழி பொய்கள் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் சட்ட அலுவலகத்தின் மூலமாக ஸூ யுவான்சென் மற்றும் மியாவோ யி இன்போடெக் நிறுவனத்திற்கு ஒரு திருத்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
அதன் அறிவுரைப்படி அவர்கள் அந்த கட்டுரை வெளியிடப்பட்ட தளங்களான நெட் சிட்டிசன் இணையதளம், Heidoh.com, நெட் சிட்டிசனின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மற்றும் தி ஸ்ட்ரைட் டைம்ஸ் ஆகியவற்றில் கட்டுரையில் தவறான கருத்துக்கள் இருந்தன என்பதை கூறி அரசாங்கத்தின் விளக்கத்திற்கான இணைப்பையும் சேர்த்து ஒரு திருத்த அறிக்கையை வெளியிட வேண்டும்.
38 ஆக்ஸ்லி சாலை தொடர்புடைய விவகாரங்களில் இருந்து வோங் லு செங் தன்னை விளக்கியுள்ளதாகவும் 38 ஆக்ஸ்லி சாலையின் கட்டாய கையகப்படுத்தல் தொடர்புடைய விஷயங்களில் அவர் எந்த ஒரு ஈடுபாடும் காட்டவில்லை எனவும் அரசாங்கம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் சட்ட உறுப்பினர் சில்வியா லிம் தொடர்ந்து கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கவில்லை என்ற கட்டுரையின் கூற்று குறித்து அந்த கூற்றானது உண்மை அல்ல எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஆரம்பிக் கேள்விகளுக்கு பதில் அளித்த பிறகு லிம் தொடர்ந்து இரண்டு கேள்விகளை கேட்டதாகவும் அவற்றிற்கு அமைச்சர் ஒவ்வொரு முறையும் பதில் அளித்ததாகவும் பதிவுகள் உள்ளது.
ஓய்வு பெறும் வயதை தாண்டிய பிறகு வோங் லு ஷெங்கின் பதவி மறு நியமனம் தொடர்பாக தலைமை வழக்கறிஞர் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் கூறியது தவறான கூற்று என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி தலைமை வழக்கறிஞரை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நியமனம் செய்யலாம் அவ்வாறான நிலையில் 60 வயது வரம்பு பொருந்தாது அல்லது காலவரையற்ற காலத்திற்கு நியமனம் செய்யப்படலாம் இந்த நிலையில் அவர் 60 வயது வரை பணியாற்ற வேண்டும் ஆனால் தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசாங்கத்தின் ஒப்புதலுடனும் ஜனாதிபதியின் விருப்பத்துடன் மற்றும் பிரதமரின் பரிந்துரையின்படி இந்த பதவியை தொடரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த தவறான தகவல்கள் வெளியிட்ட இணையதளத்திற்கு அறிக்கைகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.