மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி செய்தி..!! ஊழியர்களை தாக்கிய பயணி..!! என்ன காரணம்..??
மெக்சிகோ நகர சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெண் மாலை 5:20 மணிக்கு புறப்பட தயாராக இருந்த மெக்சிகானா விமானத்தில் ஏற இருந்தார். ஆனால் அவர் சுமார் 5:27 மணிக்கு தாமதமாக நுழைவாயிலை வந்து சேர்ந்தார்.
அதற்குள் விமானத்தில் ஏறும் செயல்முறை முடிவடைந்து விட்டது. மேலும் விமான நிறுவனம் மீண்டும் பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் அந்தப் பெண் ஆத்திரமடைந்து அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயலாது விமான நிலையத்தில் தகராறு செய்த ஊழியர்களை தாக்கியுள்ளார்.
அந்தப் பெண் கோபமடைந்து சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பு பணியாளர்களை தள்ளியும் அவர்கள் உடனடியாக தலையிட்டு அவரை தடுப்பதும் குறித்த வீடியோ பதிவு வெளியாகி உள்ளது.
மற்ற பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளின் படி அவரை கையாண்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் ஆனது இணையத்தில் சூடு பிடிக்க ஆரம்பித்து விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல இணையவாசிகள் அந்தப் பெண்ணின் முறையற்ற நடத்தையை விமர்சித்துள்ளனர் மற்றும் சிலர் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விமான நிறுவனமும் விமான நிலைய அதிகாரிகளும் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
மெக்சிகோ நகர விமான நிலையத்தில் ஏற்பட்ட இடையூறுகளில் சம்பந்தப்பட்ட பெண் அபராதம், விமான பயண தடை அல்லது பிற சட்ட ரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதா என்பதையும் அவர்கள் குறிப்பிடவில்லை.