சிங்கப்பூர் எல்லையில் இரு மலேசியர்கள் கைது..!! ஏன்..?? எதற்கு..??
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உட்லேண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மலேசிய ஆண் மற்றும் பெண் ஒருவர் 398 இ-சிகரெட்டுகளை மாற்றியமைக்கப்பட்ட டேஷ்போர்டில் மறைத்து கடத்த முயன்றனர்.
அதிகாரிகள் காரை ஆய்வு செய்த போது இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) சமீபத்திய சமூக ஊடக பதிவில், கடந்த வியாழக்கிழமை (25.09.25) மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட காரை தடுத்து ஆய்வு செய்ததாகவும், மாற்றியமைக்கப்பட்ட டேஷ்போர்டில் 398 இ-சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
41 வயது பெண் ஓட்டுநர் மற்றும் 43 வயது ஆண் பயணி உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ICA, இ-சிகரெட்டுகளுக்கு எதிரான எல்லைப் பாதுகாப்பு முக்கியம் என்று வலியுறுத்தி, எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளது.