சிங்கப்பூர் MRT நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்..!! 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய பெண்ணுக்கு சிறை..!!
சிங்கப்பூரில் MRT நிலையத்தின் தளமேடையில் எதிர்பாராமல் மோதிய 8 வயது சிறுமியை சுவரில் தள்ளிய 44 வயது பெண்ணிற்கு மே 25ஆம் தேதி அன்று நீதிமன்றம் 5 நாள் சிறை தண்டனை விதித்துள்ளது.
போனா விஸ்தா MRT நிலையத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனால் அந்தப் பெண் மீது நீதிமன்றத்தில் சிறுமிக்கு எதிராக முரட்டத்தனமாக செயல் புரிந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
MRT நிலையங்களில் கூட்ட நெரிசலின் போது ஒருவர் மீது ஒருவர் எதிர்பாராமல் இடித்துக் கொள்வது என்பது வழக்கமான ஒன்றுதான் எனவும், சிறுமியை ஹோ அவ்வாறு செய்தது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.