துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசிய பெண் கைது.!! என்ன காரணம்..??
துவாஸ் சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிள் மூலம் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற 34 வயது மலேசியப் பெண் ஒருவரை, சிங்கப்பூர் குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் ஆனது ஜூலை 26 ஆம் தேதி அன்று நிகழ்ந்துள்ளது.
மலேசியப் பதிவு எண் கொண்ட அந்த மோட்டார் சைக்கிளின் பல்வேறு ரகசிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தால் 400க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்த முன்கூட்டியே கிடைத்த உளவுத் தகவலின் படி, ICA அதிகாரிகள் அந்த மோட்டார் சைக்கிளைக் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் கள்ளச் சந்தையில் விற்கப்படும் புகையிலை பொருட்களைக் கடத்துவதுவாங்குவது அல்லது வைத்திருப்பது என்பது மிகவும் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.
இந்த வகை குற்றங்களுக்கு கடத்தப்பட்ட பொருட்களுக்கான வரி தொகையைப் போல 40 மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.