சிங்கப்பூரில் டாக்சி பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..!! கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!

சிங்கப்பூரில் டாக்சி பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு..!! கட்டணங்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு..!

சிங்கப்பூர்: அதிகரித்து வரும் இயக்கச் செலவுகள் மற்றும் எரிபொருள் செலவுகளைச் சமாளிக்க ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில், சிங்கப்பூரின் 4 முக்கிய ரைடு- ஹெய்லிங் தளங்கள் தங்களின் தற்போதைய ஓட்டுநர் கூடுதல் கட்டணம் மற்றும் எரிபொருள் மானிய நடவடிக்கைகளை நீடித்துள்ளன.

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) உடன் இணைந்த தேசிய தனியார் டாக்ஸி ஓட்டுநர்கள் (NPHVA), சங்கம் நேற்று (ஜூலை 22) பேஸ்புக்கில் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் கம்ஃபோர்டெல்க்ரோவின் ஸிக் (Zig) தளம் ஒவ்வொரு பயணத்திற்கும் பயணிகளிடமிருந்து $0.50 அல்லது $0.80 ஓட்டுநர் கூடுதல் கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற தளங்களின் ஓட்டுநர் கூடுதல் கட்டணங்கள் அல்லது எரிபொருள் கூடுதல் கட்டணங்களைப் பொறுத்த வரை, கிராஃப் (Grab) மற்றும் கோஜெக் (Gojek) ஆகியவை ஒவ்வொரு பயணத்திற்கும் $0.90 கட்டணத்தை தொடர்ந்து வசூலிக்கும் எனவும், டாடா (TADA) $18க்கு குறைவான பயணங்களுக்கு $0.90 மற்றும் $18க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு $1.20 என்ற தனது கூடுதல் கட்டணத்தை தொடரும்.

அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளைச் சமாளிக்க ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில், இந்த ஓட்டுநர் கூடுதல் கட்டண நடவடிக்கை ஆரம்பத்தில் 2022-ல் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

தொடர்புடைய அனைத்து கட்டணங்களும் முழுமையாக ஓட்டுநர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் எனவும், மேலும் தள நடத்துநர்கள் எந்த கமிஷனையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்களின் இயக்கச் செலவுகள் தொடர்பாக தொழிற்சங்கத்திற்கும் பல்வேறு பிளாட்பார்ம் ஆபரேட்டர்களுக்கும் இடையே நடந்த தொடர்ச்சியான தகவல் பரிமாற்றத்தின் விளைவாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று NPHVA தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கம் வழக்கமான கூட்டங்கள் மூலம் உறுப்பினர்களின் கருத்துக்களையும் கவலைகளையும் பிளாட்ஃபார்மிடம் தொடர்ந்து எடுத்துரைப்பதுடன் மட்டுமல்லாமல், ஓட்டுநர்கள் மீதான செயல்பாட்டு அழுத்தத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்காகவும் தொடர்ந்து பாடுபடும் எனவும் கூறியுள்ளது.