செங்காங் லைட் ரயில் – மின்தடைக்கு பின் மீண்டும் சீராகியது..!!!

செங்காங் லைட் ரயில் – மின்தடைக்கு பின் மீண்டும் சீராகியது..!!!

சிங்கப்பூர்: செங்காங் லைட் ரயில் சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

எஸ்பிஎஸ் டிரான்சிட் தனது பேஸ்புக் பக்கத்தில் மாலை 5:15 மணிக்கு இதை அறிவித்தது.

இன்று காலை 8:40 மணியளவில் மின்தடை காரணமாக செங்காங் லைட் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இந்த பாதிப்பு 29 நிலையங்களைச் சென்றடைந்தது.

மதியம் 12:54 மணிக்கு சேவை மீண்டும் தொடங்கியபோதும், கிழக்கு-மேற்கு வட்டப் பாதையில் ரயில்கள் பிற்பகல் 3:15 மணி முதல் மாலை 5 மணி வரை ஒருதிசை சேவை மட்டுமே இயங்கின.

இந்த ஒருதிசை சேவை, கேபிள் ஆய்வுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவுவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan