இலவச உணவு விதி – சமூக நன்மையா, விற்பனையாளருக்கு சுமையா…??

இலவச உணவு விதி – சமூக நன்மையா, விற்பனையாளருக்கு சுமையா...??

சிங்கப்பூர்: புக்கிட் கான்பெரா ஹாக்கர் மையத்தில் சமீபத்தில் ஓர் விவாதம் எழுந்துள்ளது. அங்குள்ள மேலாண்மை நிறுவனம் கேனோபி ஹாக்கர்ஸ் குழுமம்,விற்பனையாளர்கள் தங்கள் சொந்த செலவில் இலவச உணவுகளை வழங்க வேண்டும் என்ற ஒரு விதியை ஒப்பந்தத்தில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மாதத்திற்கு 30 உணவுகள் என்ற அளவில் இருந்த திட்டம், பின்னர் 60 உணவுகளாகவும், மூன்று ஆண்டுகளில் 100 உணவுகளாகவும் மாற்றப்பட்டது.

நிறுவனம் இதை சமூகத்திற்குத் திருப்பித் தரும் முயற்சியாக விளக்குகிறது. மேலும், தற்போது இது கட்டாயமல்ல, வழங்காதவர்களுக்கு அபராதம் இல்லை என்பதையும் குறிப்பிடுகிறது.

சில விற்பனையாளர்கள் இதை நல்ல மனநிலையில் ஏற்றுக்கொள்கிறார்கள். “நான் கையெழுத்திட்டேன்.எனவே சொன்னதை நிறைவேற்ற வேண்டும்” என்பவர் ஒருவரும் உள்ளார். ஆனால், மற்றவர்கள் இதை வருமானத்தில் கூடுதல் அழுத்தம் தரும் செயல் எனக் கருதுகின்றனர்.

உணவருந்துபவர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் பல்வேறு யோசனைகளை முன்வைத்துள்ளனர்.சிறிய தொகை நன்கொடையாகச் சேர்த்தல், வாடகை குறைப்பை பரிசீலித்தல், அல்லது அரசு உதவியை விரிவாக்குதல் போன்றவை.

சிலர் இதை குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு நேரடியாக உதவும் நல்ல வழி எனச் சொல்கிறார்கள். சிலர், “நன்கொடை என்பது விருப்பத்திற்குரியதாக இருக்க வேண்டும்” என்றும், “அது சமூக பங்கேற்பின் மூலம் நடக்க வேண்டும்” என்றும் வலியுறுத்துகிறார்கள்.

மொத்தத்தில், இது ஒரு நல்ல நோக்கமா அல்லது தேவையற்ற அழுத்தமா என்ற கேள்விக்கு இன்னும் ஒருமித்த பதில் இல்லை.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan