சிங்கப்பூரில் தீப்பற்றி எரிந்த புல்வெளி..!! புக்கிட் பாஞ்சாங்கில் பரபரப்பு..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள HDB குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள திறந்தவெளி புல்வெளிப் பகுதியில் நேற்று (செப்டம்பர் 3) மாலை திடீரென தீப்பிடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புக்கிட் பாஞ்சாங் ரிங் ரோடு மற்றும் ஃபாகா ரோடு சந்திப்புக்கு அருகே அமைந்துள்ள புல்வெளிச் சரிவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
சுமார் 30 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட பகுதியில் இருந்த தாவரங்கள் மற்றும் புல்வெளிகள் தீயில் சிக்கியதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
நேற்று மாலை சுமார் 4:30 மணியளவில் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றிய பகுதியில் இருந்து அடர்த்தியான வெள்ளை புகை வானில் பரவியதால், அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவம் தொடர்பான காணொளியில், திறந்தவெளிப் பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிவதும், அதைச் சுற்றிலும் அடர்த்தியான புகை சூழ்ந்திருப்பதும் காணப்பட்டது.
தகவல் கிடைத்ததும் SCDF தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காவல்துறை வாகனங்களும் அங்கு காணப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள் நீர்த்தாரையைப் பயன்படுத்தி தீயை வெற்றிகரமாக அணைத்தனர்.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என SCDF தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காணொளியில், இரண்டு பெரிய உலோகக் கூண்டுகள் அல்லது தட்டுகள் போன்ற அமைப்புகள் காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவற்றுக்குள் எரிந்த பொருட்களும், அதைச் சுற்றியுள்ள புல்வெளியிலும் எரிந்த தடயங்களும் காணப்பட்டன.
இந்த உலோகக் கூண்டுகள் பொதுவாக ஜோஸ் பேப்பர் (Joss Paper) எனப்படும் காகிதப் பொருட்களை பாதுகாப்பாக எரிப்பதற்காக பயன்படுத்தப்படுபவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் Hungry Ghost Festival காலத்தில் இதுபோன்ற வழிபாட்டு முறைகள் இடம்பெறுகின்றன.
தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயங்களோ எதுவும் ஏற்படவில்லை.
பொதுமக்கள் திறந்தவெளியில் தீ மூட்டும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், தீ அணைக்கப்பட்ட பின்னர் எரிந்த பொருட்கள் முழுமையாக பாதுகாப்பாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
ஒரு சிறிய தீப்பொறி கூட பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பொது இடங்களில் தீ தொடர்பான செயல்பாடுகளில் கூடுதல் கவனம் அவசியம்.
Follow us on : click here
Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship
WHATSAPP CHANNEL LINK
