சாங்கி வில்லேஜ் சாலையில் கோர விபத்து..! 30 வயது நபர் பலி!

சாங்கி வில்லேஜ் சாலையில் கோர விபத்து..! 30 வயது நபர் பலி!

சிங்கப்பூர்: சாங்கி வில்லேஜ்ஜில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) இரவு லாரி ஒன்று மோதியதில் 30 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சோகமான விபத்து குறித்த தகவலைச் சிங்கப்பூர் காவல்துறையும், குடிமைத் தற்காப்புப் படையும் உறுதிப்படுத்தி உள்ளன.

தெலுக் பாக்கு சாலை மற்றும் சாங்கி வில்லேஜ் சாலை சந்திப்பில்() இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை (ஜூலை 20) இரவு சுமார் 10:55 மணியளவில் அதிகாரிகளுக்கு விபத்து குறித்த தகவல் கிடைத்துள்ளது.

தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். லாரி மோதியதில் 30 வயதுடைய நபர் நினைவிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

அவரை மீட்ட அதிகாரிகள், உடனடியாக சாரங்கிப் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


விபத்து தொடர்பாக 37 வயதுடைய லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இணையத்தில் இந்த விபத்து குறித்த வீடியோக்களானது தொடர்ந்து பரவி வருகிறது. அந்த வீடியோவில் சம்பவ இடத்தில் பல கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதும், காவல்துறையினர் விசாரணை நடத்துவதும் தெரிகிறது.