உலக செய்திகள்

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!!

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!! நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போது, ​​எவ்வாறு வெற்றிகரமாக இழப்பீடு பெறுவது? யாரிடம் உதவி கேட்பது? போன்ற கேள்விகள் பலருக்கு இருக்கும். அப்படி கொலம்பியாவிற்கு பயணம் செய்ய திட்டமிட்ட ஆடவர் தனது விடுமுறையை ரத்து செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அவர் ஏற்கனவே தனது விமானக் கட்டணம் மற்றும் ஹோட்டலுக்கு பணம் செலுத்திவிட்டதால் பணத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி என்று தெரியாமல் தவித்த அவர், […]

ChatGPT செயலியால் இழப்பீட்டுத் தொகையை பெற்ற நபர்…!! Read More »

குடியிருப்பு பகுதியின் மீது மோதிய விமானம்..!!!

குடியிருப்பு பகுதியின் மீது மோதிய விமானம்..!!! தெற்கு கலிபோர்னியாவில் ஒரு சிறிய விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. வீடுகள் மீது மோதியதில் பல கார்கள் தீப்பிடித்தன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:45 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தைத் தொடர்ந்து மூன்று குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாக சான் டியேகோ போலீசார் தெரிவித்தனர். செஸ்னா 550 விமானத்தின் சேதமடைந்த பாகங்களைக் கண்டாலோ அல்லது எரிபொருளின் வாசனை வந்தாலோ, அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிகாரிகளை அழைக்குமாறு

குடியிருப்பு பகுதியின் மீது மோதிய விமானம்..!!! Read More »

கத்தார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா..!!!

கத்தார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா..!!! கத்தார் ஜனாதிபதி டோனல்ட் டிரம்பிற்கு பரிசளித்த போயிங் 747 விமானத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. அரசாங்க விதிமுறைகளின்படி அந்த விமானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அது கூறியது. அந்த விமானத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு,திரு. டிரம்பின் அதிகாரப்பூர்வ பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று செய்தித் தொடர்பாளர் சியான் பார்னெல் தெரிவித்தார். திரு.டிரம்ப்பின் சமீபத்திய மத்திய கிழக்கு பயணத்தின் போது கத்தார் இந்த விமானத்தை அவருக்கு

கத்தார் பரிசளித்த விமானத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கா..!!! Read More »

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!!

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!! சாங்கி விமான நிலையக் குழுமத்தின் வருடாந்திர விமான நிறுவன விருதுகளில், இண்டிகோ நிறுவனம் இவ்வாண்டின் சிறந்த பங்காளித்துவ அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் சிங்கப்பூருக்கு சேவைகளை வழங்கி வரும் இண்டிகோவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்த விருது அங்கீகரிக்கிறது. தற்போது சாங்கி விமான நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்யும் ஐந்தாவது பெரிய வெளிநாட்டு விமான நிறுவனமாக இது உள்ளது. இந்த விருது கடந்த மாதம் வழங்கப்பட்டதாக சாங்கி

2025 சாங்கி விமான நிலைய விருது பெற்ற இண்டிகோ நிறுவனம்..!!! Read More »

ஜொகூர் பாரு காபி கடையில் அரங்கேறிய கத்தி குத்துச் சம்பவம்..!!!

ஜொகூர் பாரு காபி கடையில் அரங்கேறிய கத்தி குத்துச் சம்பவம்..!!! மலேசியாவின் ஜொகூர் பாருவில் உள்ள ஒரு காபி கடையில் இருந்த நான்கு ஆண்களையும் ஒரு பெண்ணையும் கும்பல் ஒன்று பாராங் கத்திகளாலும் தடிகளாலும் தாக்கியது. தாக்குதல் தொடர்பாக விசாரணைக்காக 19 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆக இளையவருக்கு 13 வயது என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு சட்டவிரோத கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று

ஜொகூர் பாரு காபி கடையில் அரங்கேறிய கத்தி குத்துச் சம்பவம்..!!! Read More »

உயிரிழந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்திய நகக் கலைஞர்…!!

உயிரிழந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகு படுத்திய நகக் கலைஞர்…!! பேங்காக்கைச் சேர்ந்த ஒரு நகக் கலைஞர் இறந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்தியுள்ளார். அவர் இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அழகு நிலையத்திற்குச் செல்லவிருந்த நாளில், வாடிக்கையாளர் ஒரு விபத்தில் இறந்தார். வாடிக்கையாளரின் தோழி நகக் கலைஞரைச் சந்தித்து, இறுதிச் சடங்கில் அவரது நகங்களை அழகு படுத்தச் சொன்னார். அந்த வாடிக்கையாளரின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று தனது தோழி கேட்டுக் கொண்டதாக நகப் பராமரிப்புக்

உயிரிழந்த வாடிக்கையாளரின் நகங்களை அழகுபடுத்திய நகக் கலைஞர்…!! Read More »

பிரேசில் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகள் கவலை..!!

பிரேசில் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகள் கவலை..!! பிரேசிலில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் அந்நாட்டின் கோழிப்பண்ணைத் தொழிலுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பிரேசிலிய கோழிகள் தடைசெய்யப்பட்டாலும், சீனாவும் பிற நாடுகளும் அவற்றின் இறக்குமதி மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்று நம்புவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலக வர்த்தகத்தில் பிரேசிலின் கோழி ஏற்றுமதி 35 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, பிரேசில் மீது விதிக்கப்பட்ட தடை, அந்நாட்டு விவசாயிகளை

பிரேசில் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகள் கவலை..!! Read More »

19 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆடவர்..!!!

19 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆடவர்..!!! பிரிட்டனைச் சேர்ந்த கென்ட்டன் கூல் 19வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். ஷெர்பா அல்லாத எவரெஸ்ட் சிகரத்தை அதிக முறை ஏறியவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 51 வயதான இவர் 8,849 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நேற்று அடைந்ததாக கூறப்படுகிறது வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…!!! அவருடன் நேபாள ஷெர்பா டொர்ஜி கியால்ஜென் 23வது முறையாக சிகரத்தை அடைந்து

19 வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆடவர்..!!! Read More »

“காதலுக்கு கண் இல்லை” சீனாவில் பேசு பொருளான காதல் ஜோடி..!!

“காதலுக்கு கண் இல்லை” சீனாவில் பேசு பொருளான காதல் ஜோடி..!! தென்மேற்கு சீனாவைச் சேர்ந்த ஸிஹௌ மற்றும் சியாவ்யு என்ற காதல் ஜோடியின் உயரம் தான் இப்போது பேசுபொருளாகியுள்ளது. அதாவது ஆணை விட பெண் சற்று உயரமாக உள்ளார்.ஆண் 1.68 மீட்டர் உயரமும் பெண் 2.2 மீட்டர் உயரமும் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் சீனாவின் சொங்சிங் நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 2 வருடங்களுக்கும் மேலாக டேட்டிங் செய்து வருகின்றனர். அவர்கள் ஒருவருக்கொருவர் 3 வருடங்களுக்கு முன்பிலிருந்தே தெரியும்.

“காதலுக்கு கண் இல்லை” சீனாவில் பேசு பொருளான காதல் ஜோடி..!! Read More »

அதிர்ச்சி..!! அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய்…!!!

அதிர்ச்சி..!! அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய்…!!! அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் புரோஸ்டேட் எனும் ஆண் சுரப்பிப் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (மே 16) 82 வயதான திரு.பைடனுக்கு புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். ஜோ பைடனும் அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். புற்றுநோய் தீவிரமானது என்றாலும், அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று திரு. பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட்டப்பாதை

அதிர்ச்சி..!! அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குப் புற்றுநோய்…!!! Read More »