ஆரஞ்சு நிறத்தில் புதிய வட்டப்பாதை ரயில்கள்..!! LTA அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
சிங்கப்பூரில் புதிய வட்டப் பாதை ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்கள் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த செயல்பாட்டு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ரயில்கள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் – இந்த இரண்டு நிறங்களில் எது பொருத்தமாக இருக்கும் என்ற நீண்ட யோசனைக்கு பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) ஆனது ரயில்களுக்கு ஆரஞ்சு நிறம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 13) முதல் இந்த ஆரஞ்சு நிற வட்டப் பாதை ரயில் சேவைகள் தொடங்கவுள்ளது.
ரயில்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டிருந்த 4 இடைநிறுத்தப் பேருந்துகள் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என்றும் LTA தெரிவித்துள்ளது.