சிங்கப்பூரில் குப்பை லாரியில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூரில் குப்பை லாரியில் ஏற்பட்ட தீ விபத்து..!!

சிங்கப்பூர் டம்பைன்ஸ் தெரு 12, பிளாக் 143-ல் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் குப்பை லாரி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த குப்பை லாரிக்குள் வீசப்பட்ட ப பொருட்களில் இருந்து இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியதாவது: இந்த தீ விபத்து சம்பவமானது நேற்று (ஏப்ரல் 9 ) திறந்தவெளி வாகனம் நிறுத்தும் இடத்தில் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இந்த தகவலானது தங்களுக்கு நேற்று (ஏப்ரல் 9) இரவு 8:05 மணி அளவில் கிடைத்துள்ளததாகவும் தெரிவித்துள்ளது.

குப்பை லாரியில் இருந்த பொருட்கள் மூலம் இந்த தீ பற்றி இருக்கலாம். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு தீயணைப்புக் குழாய்களைப் பயன்படுத்தி எரிந்து கொண்டிருந்தத் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த ஒரு காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை.

மேலும், குப்பை லாரியில் தீ விபத்து நடந்ததன் காரணம் இன்னும் காவல்துறையின் விசாரணையில் உள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதில், நீல நிறக் குப்பை லாரியில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறுவது போன்ற காணொளிப் பகிரப்பட்டு வருகிறது. அதில் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் குழாய்களைப் பயன்படுத்தியப் பதிவும் காணப்படுகிறது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK