சிங்கப்பூரில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் கைது..!! காவல்துறை அதிரடி..!!
சிங்கப்பூர்: நாடு முழுவதும் பல இடங்களில் காவல்துறை நடத்திய சோதனைகளில் சட்ட விரோதமாக குதிரைப் பந்தயத்தில் ஈடுபட்ட 29 வயது முதல் 87 வயதிற்கு உட்பட்டவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.
காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட அறிக்கையில் புலனாய்வு துறை மற்றும் ஏழு காவல் பிரிவுகளைச் சேர்ந்த 170 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், இந்த மாதம் (மே) 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஜூரோங் வெஸ்ட், யிஷூன், ஹெலிகாங், ஆங் மோ கியோ மற்றும் பெடோக் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகள் நடத்தியது.
காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், 69 பேர் இடைத்தரவர்களாக செயல்பட்டதும், மேலும் சட்டவிரோதமான பந்தயங்களை சேகரித்து வைத்ததும் தெரியவந்துள்ளது.சூதாட்ட கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறியதாக சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சூதாட்ட கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் உரிமம் இல்லாத சூதாட்டம் நடத்துநர்கள் மீது பந்தயம் கட்டுபவர்களுக்கு $10,000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நடத்துநர்களாக சட்ட விரோத பந்தயச் சேவைகளை வழங்குபவர்களுக்கு $500,000 வரை அபராதமும், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.