சில காலமாக செங்காங் – பெங்கோல் LRT சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. ஆகையால் மக்களுக்குச் சிறப்பான சேவை வழங்கும் வகையில் இந்த கட்டமைப்பு விரிவுப்படுத்தப்பட உள்ளது.
செங்காங் – பெங்கோல் LRT சேவையை எஸ்பிஎஸ் போக்குவரத்து நிறுவனம் வழங்கி வருகிறது.
நிலையத்தில் புதியதாக ஒரு பராமரிப்புக் கட்டிடம் மற்றும் பயணச் சேவைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் சோதனைத் தண்டவாளம் போன்றவையும் இடம் பெற உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.
இந்த விரிவாக்கப் பணிகள் 2027 ஆம் ஆண்டில் முடிவடையும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.